சென்னை: சென்னையில் தனியார் விடுதி உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் தங்கும் விடுதி மற்றும் அதன் உரிமையாளர் வீடுகள், அலுவலகம் உள்பட நான்கு இடங்களில் வருமான வரிதுறைத்துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்தி வரும் அதிரடி சோதனையில், ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக ரூ.500 கோடிக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ரூ.300 கோடிக்கு ஆவணங்கள் எங்கு உள்ளது என்பது தொடர்பாகவும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சோதனை நடைபெறும் இடங்களின் உரிமையாளர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேரா வெங்கடாசாமி தெருவில் உள்ள இல்லத்தில் சோதனை வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டு இருக்கும் போது வீட்டில் இருந்த சுபீர் அலி என்ற நபர், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து லாவகமாக தப்பிச் சென்றார்.
இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வருமான வரித்துறை உயர் அதிகாரி சமந்தா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரிஏய்ப்பு புகாரின் பேரிலே வருமானவரி துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.