தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு

DIN

தாம்பரம்:  மேற்கு தாம்பரம் கடப்பேரியில் கோயில் மதில்சுவரில் ஏறி விளையாடிய பள்ளி மாணவன்,மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

இது குறித்து தாம்பரம் போலீஸ் தரப்பில் கூறியது: சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜா16 அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறைக்கு கடப்பேரி மௌலானா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருந்த ராஜா  செவ்வாய்கிழமை அருகில் உள்ள அம்மன் கோயில் மதில் சுவரில் ஏறி விளையாடிக் கொண்டு இருந்தபோது, மதில்  சுவருக்கு மேல் சென்ற உயர்மின்அழுத்தமின் கம்பியில் கைபட்டு, மின்சாரம் தாக்கியதில் தூக்கி ஏறியப்பட்டான்.

படுகாயமடைந்த ராஜாவை  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தாம்பரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT