தற்போதைய செய்திகள்

ஏழைகளின் வளர்ச்சிக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

மத்திய அரசு ஏழைகளின் வளர்ச்சிக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். 

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்றுடன் தனது 4ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.  பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைப்போம். பாமர மக்களின் வளர்ச்சிக்காக பா.ஜ.க செயல்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததால் புகையில்லா  மாநிலங்கள், கிராமங்கள் உருவாகியுள்ளன. 

காந்தி வினோபாவிற்கு பிறகு மக்கள் கேட்ட திட்டத்தை யாரும் நிறைவேற்றவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT