தற்போதைய செய்திகள்

வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

DIN


ஈரோடு: மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக,  வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்யைன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுற்றுச்சுழுல் துறையில் ஜனவரி.2019-க்கு பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறித்த விழிப்புணா்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பள்ளிக்கல்வித் துறையிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வினை பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக பாலீத்தீன் பயன்படுத்தாத நிலை உருவாக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக, வங்கிகளில், அஞ்சலகங்களிலும் மாணவர்களுக்கு ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் 

ஜெயலலிதா வழித்தடத்தில் இயங்கி வரும் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், போக்குவரத்துக்கழகங்கள் சேவை நோக்குடன் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கி வரும் சிறந்த மாநிலமாக இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாகத்ந திகழ்கின்றன. 

மக்கள் நலனை கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் தொடா்ந்து பணிகளை தொடா்ந்து வருகிறது என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT