தற்போதைய செய்திகள்

அமைச்சர் காமராஜ் உறவினருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நிறைவு

DIN


திருவாரூர்: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமரான் உறவினரும் ஒப்பந்ததாரர் மனோகரனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் நடைபெற்று வந்த வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி. மனோகரன். இவர், திருவாரூர் மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய பிரமுகராகவும், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையின் அரசு கட்டுமானப்பணி செய்வதற்கான முதல்நிலை ஒப்பந்ததாரகவும் இருந்து வருகிறார். 

இவரது வீடு, மன்னார்குடி தென்வடல் 6-ஆம் தெருவில் உள்ளது. இந்நிலையில், மத்திய வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் 5 பேர் கொண்ட குழுவாக பிரிந்து, தனித்தனி காரில், திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மன்னார்குடிக்கு வந்தனர்.

பின்னர், டி. மனோகரனின் வீடு, பெரியகம்மாளத் தெருவில் உள்ள அலுவலகம், கீழராஜவீதியில் உள்ள தங்கும்விடுதி, பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். 

வருமானவரிச் சோதனை நடைபெற்ற மூன்று இடங்களிலும், வெளியூர் போலீஸார் நவீன துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கிராமம் பிரதான சாலையில் நாகலூர் கிராமத்தில் மனோகரனுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை காலையில் தொடங்கிய சோதனை இன்று காலை 10.30 மணி வரை நீடித்தது.

நேற்று காலை மத்திய வருமானவரித் துறையைச் சேர்ந்த 25 பேர் சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், மாலையில் கூடுதலாக மேலும், 20-க்கும் மேற்பட்டோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT