சென்னை: சென்னை அபிராமபுரத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சொத்துப்பிரச்னை தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க ஐபிஎஸ் அதிகாரி போல சைரன் வைத்த வாகனத்தில் வந்த சிவநேசன், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் சில உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி மிரட்டி உள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கார் மற்றும் 6 கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.