தற்போதைய செய்திகள்

ஈரான் ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் பலி; 53 பேர் காயம்

ஈரான் ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 24 பேர் உயிரிழந்தனர். 53 பேர்

ANI


ஈரான்: ஈரான் ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 24 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.  

1980 முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் தொடங்கியதன் நினைவாக, ஈரான் ஆவாஸ் நகரில் இன்று நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது ராணுவ அதிகாரிகள் போன்று மாறுவேடமிட்டு மோட்டார் வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் அருகில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பொதுமக்கள், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையினர் (ஐஆர்ஜிசி) உள்பட 24 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 53 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

SCROLL FOR NEXT