ராஜபாளையம்: பாஜகவுக்கு நம்பிக்கையாக இருந்தால் ஆதரிப்போம், துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம் என இல.கணேசன் கூறினார்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் பேசுகையில், பாஜக எந்த மதத்திற்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல. பாஜகவுக்கு நம்பிக்கையாக இருந்தால் ஆதரிப்போம், துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம்.
முத்ரா வங்கி திட்டம் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல என்றார்.
மேலும், நீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான வழக்கை, எச்.ராஜா சட்ட ரீதியில் திறமையுடன் எதிர்கொள்வார் என இல.கணேசன் தெரிவித்தார்.