தற்போதைய செய்திகள்

உயர்நீதிமன்ற கிளை உத்தரவை அடுத்து டிக் டாக் செயலியை முடக்கியது கூகுள்

DIN


இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி  பல லட்சம் வீடியோக்கள் பதிவேற்றனர். இந்நிலையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.  வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை கடந்த 3ஆம் தேதி டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகத்தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT