முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.25 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 2.25 கோடி மதிப்புள்ள வைரங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:43 AM
பகிர்:


சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 2.25 கோடி மதிப்புள்ள வைரங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இன்று சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தினர். அப்போது பயணி ஒருவர் தனது உடைமைக்குள் வைரத்தை மறைத்து, கடத்தி வந்ததை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

ரூ.2.25 கோடி மதிப்புள்ள வைரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மலேசியாவைச் சேர்ந்த அஜ்மல்கான், நாகூர் மீரான் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.