தற்போதைய செய்திகள்

காணாமல் போன காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்றார் கேள்விக்கு முகிலன் பதிலளிக்க மறுப்பு: சிபிசிஐடி

DIN


சென்னை: காணாமல் போன காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்ற தகவல்களை கேட்ட போது முகிலன் பதிலளிக்க மறுத்து விட்டதாக சிபிசிஐடி செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காணாமல் போன காலக்கட்டத்தில்,எங்கிருந்தார் என்பது குறித்து கேட்டபோது முகிலன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், விசாரணைக்கு பின்னா் முகிலன், எழும்பூா் சென்னை பெருநகர இரண்டாவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜர்படுத்துவற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிபிசிஐடி விசாரணைக்குப் பின் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முகிலன், மருத்துவ பரிசோதனைக்கு பின் ராயபுரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை இல்லத்தில் ஆஜர்படுத்த முகிலனை பாதுகாப்புடன் சிபிசிஐடி அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT