தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே கோர விபத்து: 9 பேர் பரிதாப பலி

DIN


 
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் உள்ள ஏமப்பேர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தும், சென்னையில் காங்கேயம் நோக்கி சென்ற மினி வேனும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வேனில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த கோர விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 
காயம் அடைந்தவர்கள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 

உயரிழந்தவர்கள் குறித்த அடையாளம் எதுவும் இதுவரை தெரியவில்லை. 
மினி வேனி பயணித்தவர்கள் அனைவரும் உத்திரமேரூரில் இருந்து காங்கேயத்தில் மின் கம்பம் நடும் பணிகளுக்காக சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT