சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சல்களுடன் இன்று காலை (நவ.7) ஏற்பட்ட மோதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிஜாப்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சிஆர்பிஎப்) ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்த இடங்களுக்கு விரைந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட் படையினர் சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், நக்சல்களுடனான மோதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.