புதுச்சேரி: தமிழிசையை நேரடியாக ஆளுநராக நியமனம் செய்தது விதிமுறை மீறிய செயல் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி, அவருக்கு வாழ்த்துகள்.
அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநராக நியமிக்ககூடாது என சர்க்காரியா கமிஷம் தெளிவாக கூறியுள்ளது.
ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று நாராயணசாமி கூறினார்.