தற்போதைய செய்திகள்

பஞ்சாப்: மொஹாலியில் மேலும் 11 பேருக்கு கரோனா 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மேலும் புதிதாக 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

DIN

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மேலும் புதிதாக 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84 -ஆக உயர்ந்துள்ளது என்று துணை ஆணையர் கிரிஷ் தயாலன் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மாநிலத்தின் மொஹாலியில் மேலும் புதிதாக 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 84 -ஆக உயர்ந்துள்ளது என்று துணை ஆணையர் கிரிஷ் தயாலன் தெரிவித்துள்ளார். 

மேலும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள 11 பேரில், பேர் நந்தேத் யாத்ரீகர்கள் 10 பேர் மற்றும் ஒருவர் முல்லன்பூரைச் சேர்ந்த பிஜிஐ பணியாளர். 

மொஹாலியில் 30 பேர் தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் 52 -ஆக உள்ளது. இரண்டு பேர் இறந்துள்ளனர் என்று தயலன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT