தற்போதைய செய்திகள்

வேதாரண்யம்: மின்கம்பி அறுந்து விழுந்து பூ பறிக்கச்சென்ற பெண் உயிரிழப்பு

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மல்லிகைப் பூ பறிக்கச் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கிய பெண் உயிரிழந்தார்.

ஆயக்காரன் புலம் -3 , காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி புஷ்பவள்ளி (40). கூலித் தொழிலாளியான இவர், பக்கத்து கிராமமான கருப்பம்புலம் மேலக்காடு, சுப்பிரமணியன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைப் பூ பறிப்பதற்காக சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து புஷ்பவள்ளியின் தலையில் விழுந்ததில் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து, கரும்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

இது குறித்து வாய்மேடு காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT