தற்போதைய செய்திகள்

சுஷாந்த் சிங் மரண வழக்கு: 56 பேரின் வாக்குமூலம் பதிவு

DIN

சுஷாந்த் சிங் மரண வழக்கில் இதுவரை 56 பேர் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தற்போது வரை 56 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய மும்பை மாநகர ஆணையர் பரம் பீர் சிங், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

விசாரணை நடத்தப்பட்ட 56 நபர்களில் அவரது காதலி ரியாவும் அடங்குவார். அவரிடம் இரண்டு முறை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக பிகார் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விசாரணையின் போது அவரது வங்கிக் கணக்கில் 18 கோடி இருந்தது. அதில் 4.5 கோடி அவரது வங்கிக் கணக்கிலேயே உள்ளது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT