முகப்பு
தற்போதைய செய்திகள்

மிசோரமில் இன்று 12 பேருக்கு கரோனா உறுதி

மிசோரமில் இன்று புதிதாக 5 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
கோப்புப்படம்
பகிர்:

மிசோரமில் இன்று புதிதாக 5 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு  620 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆவர். 

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 298 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 23,324 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.