சிறைக் கைதிகளுக்கு இணையவழி யோகா பயிற்சி
தமிழக சிறைத்துறையின் வேண்டுகோளைக் ஏற்று ஈஷா யோகா மையம் சார்பில் ஜூலை 28 முதல் மாநிலம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்து வருகிறது.
தமிழக சிறைத்துறையின் வேண்டுகோளை ஏற்று ஈஷா யோகா மையம் சார்பில் ஜூலை 28 முதல் மாநிலம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலும் கைதிகளுக்கு யோகா பயிற்சி நடந்து வருகிறது.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பயிற்சி பெற்ற தமிழ் பயிற்றுனர்கள் மூலம் சென்னை, வேலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் பயனடைந்துள்ளனர்.