தற்போதைய செய்திகள்

சங்ககிரி அருள்மிகு தில்லை விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜைகள்  

DIN

சங்கிகரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி  நகர், தெலங்கர் தெருவில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் கோவிலில் விநாயகர் சுவாமிக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி நகர்,  தெலங்கர் தெருவில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும் மன்னர் காலத்திலேயே ஒரே கல்லால் விநாயகர் சுவாமி வடிவமைக்கப்பட்டுள்ளன. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்தில் அதிகாலை கணபதி ஹோமம் செய்யப்ப்டடு அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டும் மேலும் பல்வேறு பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு அருகம்புல், வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டும் பொங்கல், சுண்டல், கொழுகட்டை வைத்து படைத்து பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி கோவில் அர்ச்சகர் மட்டுமே பூஜைகளை செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் ஊழியா் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT