தற்போதைய செய்திகள்

உலகம் முழுவதும் பாதிப்பு 2.33 கோடி: பலி 8.08 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 8,08,695 லட்சமாக உயர்ந்தது. 

DIN


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 8,08,695 லட்சமாக உயர்ந்தது. 

இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 9  ஆயிரத்து 272 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,33,80,182 கோடியாக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 752 பேர் பலியானதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 8,08,695 ஆக அதிகரித்துள்ளன.

நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,59,06,254 ஆகவும், 66,65,233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,717 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.     

கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 58,41,428    பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,80,174 ஆக அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, கரோனா நோய்த்தொற்றால் பிரேஸில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 3.58 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது

காலிக்கட்டை வீழ்த்தியது ஹைதராபாத்

தமிழ்குமரனுக்கு பாமகவில் பதவி: பென்னாகரத்தில் கொண்டாட்டம்

ஆக்கிரமிப்பில் இருந்த 7,930 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT