முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 1,850 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் ஆணையம்

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
தேர்தல் ஆணையம்
பகிர்:

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. முதற்கட்டமாக டிசம்பர் 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 10 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக டிசம்பர் 14 ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கவுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ஆம் தேதி நடத்தபடவுள்ளது.

இதனையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து பதட்டமான வாக்குச்சாவடிகளாக 1,850 வாக்குச் சாவடிகளை வகைப்படுத்தியுள்ளனர்.

அதில், அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 785 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக பதானம்திட்டா மாவட்டத்தில் 5 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கும் அதிகமான பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கொண்ட மாவட்டங்களாக திருவனந்தபுரம் (180), மலப்புரம் (100), கோழிக்கோடு (120), பாலக்காடு (182) மற்றும் காசராகோடு (100), வயநாடு (152) உள்ளன.

இதனைத் தொடர்ந்து பதட்டமானாதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது விடியோ பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →