தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்தியா பயணத்திற்கு பின் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகிறது. 

டிரம்ப் இந்திய பயணத்தின் போது, இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தின, இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தன, இந்த ஒப்பந்ததின் கீழ் அப்பாச்சி ஹெலிகாப்டா், எம்.ஹெச்.-60 ‘ரோமியோ’ ஹெலிகாப்டா் உள்ளிட்ட கூடுதல் திறன்மிக்க, ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பாதுகாப்புத் தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. 

அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தில்லியில் தொடர் வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 

பட்ஜெட் தாக்கல் பின்னர் நடைபெற்று வரும் இரண்டாவது அமைச்சரவை கூட்டம்.  முதல் அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

கம்பீரா பால விபத்து: 27 நாள்களாக அந்தரத்தில் தொங்கிய லாரி பாதுகாப்பாக மீட்பு!

Uttarakhand வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்! பதைபதைக்கும் காணொலி!

SCROLL FOR NEXT