தற்போதைய செய்திகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாகூரில் காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூரில் தொடர் காத்திருப்புப் போராட்டம்

DIN


நாகப்பட்டினம்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாகூரில் தொடர் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், இந்தச்  சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நாகூர் சியா மரைக்காயர் தெருவில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் போராட்டம் தொடங்கியது. நூற்றுக்கும் அதிகமான பெண்கள் உள்பட திரளானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT