தற்போதைய செய்திகள்

பாஜக மாநில பொதுச் செயலாளர் வீட்டில் கொள்ளை

ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள  மர்ம நபர்களை போலீஸார் தேடி

DIN


ஓசூர்: ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள  மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில் நிலையம் எதிரே பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே எஸ் நரேந்திரன் வசித்து வருகிறார். இவர் மற்றும் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். 

இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.  வீட்டுக்குள் இருந்த பூரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடந்தன.   

தகவலறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாநில பாஜக பொதுச் செயலாளர் வீட்டில் நடத்துள்ள திருட்டுச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT