சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுவாமி விவேகானந்தரின் நினைவுதினம் பாஜக மற்றும் இந்துமுன்னனி சார்பில் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி மானாமதுரை காந்திசிலை பின்புறம் விவேகானந்தர் நின்று உரையாற்றிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு ஸ்தூபிக்கும் அவரது உருவப்படத்துக்கும் பாஜக, இந்து முன்னனியினர் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் நினைவஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் விவேகானந்தரின் பொன்மொழிகளுக்கு ஏற்ப வாழ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பாஜக மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவர் எஸ்.சங்கரசுப்ரமணியன், இந்து முன்னனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குப்புச்சாமி உள்ளிடோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.