தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டி சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சார்பில் நிவாரணம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஆண்டிபட்டி நகரில்  உள்ள வேல்மணி வணிக வளாகம் முன்பாக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மேலும், ஒவ்வொருவருக்கும் 2 முக கவசங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் வளர்மதி மகாராஜன், நிர்வாகிகள் செஞ்சுரி செல்வம், பூஞ்சோலை சரவணன், மணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT