தற்போதைய செய்திகள்

வியத்நாமில் புதிதாக 45 பேருக்கு தொற்று

PTI

வியத்நாமின் டா நாங் என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியத்நாமில் மூன்று மாதத்திற்கு பிறகு கடந்த வாரம் டா நாங் மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அந்த மருத்துவமனையின் தொடர்பில் இருந்த பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் டா நாங் மருத்துவமனை ஊழியர்கள், தற்போது சிகிச்சைப் பெறும் நோயாளிகள், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆவர்.

இதனால் டா நாங் பகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது.

இன்று அங்குள்ள ஒரு விளையாட்டு அரங்கில் தற்காலிக மருத்துவமனை ஒன்றை கட்டும் பணி தொடங்கியுள்ளனர். மேலும், இந்த நகர மக்களுக்கு உதவ மற்ற பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் இங்கு வரவழைக்கப்பட உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT