தற்போதைய செய்திகள்

பட்டுக்கோட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி

DIN

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு ஆற்றங்கரை பகுதியில் நேற்று (செவ்வாய்) இரவு 11 மணி அளவில் பாலாஜி-சாந்தி தம்பதியின் கூரை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சென்று தீ பரவாமல் அணைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த பட்டுக்கோட்டை சட்டப்பேரவை  உறுப்பினர் சி.வி. சேகர், வட்டாட்சியர் சா. அருள்பிரகாசம் ஆகியோர் புதன்கிழமை காலை சம்பவயிடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி, அரசு நிதியிலிருந்து ரூ.5,000, சட்டப்பேரவை உறுப்பினர் சொந்த நிதியிலிருந்து ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000  நிதி உதவியும், அரிசி, வேஷ்டி, சேலை, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, அதிமுக பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், நகர முன்னாள் அவைத் தலைவர் பாப்பையன் தேவராஜன், வார்டு செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT