தற்போதைய செய்திகள்

திருப்பூண்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத வகையில் விலை குறைந்துள்ள நிலையில் கரோனா பெருந்தொற்று நேரத்தில் அநியாயமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ள மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசையும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசையும் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT