தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே சூதாட்டம் ஆடிய  அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 9 பேர் கைது 

DIN


ஆம்பூ: ஆம்பூர் அருகே சூதாட்டம் ஆடிய  அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 9 பேரை காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உமர்ஆபாத் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சிலர் சூதாட்டம் ஆடுவது தெரிய வந்தது.   அதன் பேரில் செல்வகுமார் , ரபீக் அகமது , பாலாஜி, ஜீவரத்தினம் , ஆசிப், கலையரசன், குப்புசாமி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன், பழனி  உள்ளிட்ட 9 பேரை உமர்ஆபாத் காவலர்கள் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து 6 பைக்குகள், 10 செல்போன், ரொக்கம் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏற்கனவே இது போல் சூதாட்டம் ஆடிய போது கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT