தற்போதைய செய்திகள்

கோயம்பேடு சந்தை மூலம் 88 பேருக்கு தொற்று உறுதி

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

DIN


சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

சென்னை கோயம்பேடு சந்தையில்  வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோயம்பேட்டில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் மொத்த விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தை இயங்குவது குறித்து சிஎம்டிஏ சார்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிஎம்டிஏ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர், காஞ்சிபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பாதிப்பு விவரம்: சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், காஞ்சிபுரம் பெருநகர் பகுதியை சேர்ந்த 7 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் ஒருவர் என 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT