கடலூர்: சென்னை கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியவர்களால் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவியது. இதுவரையில் 413 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. எனவே சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் திட்டக்குடி அருகிலுள்ள தொழுதூர் நாவலூர் நெடுஞ்செழியன் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த 163 பேர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.