வாணியம்பாடி அடுத்த 2500 அடி உயரமுள்ள நெக்னாமலை மலை கிராமத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் வீரமணி 8 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்துசென்று 143 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள், மாவட்ட எஸ்பி விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவலர்கள் உடன் சென்றனர்.
முன்னதாக கிராம மக்களுக்கு ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான மருத்துவ குழுவினர் இலவச மருத்துவ பரிசோதனைகளை நடத்தி ஆலோசனைகளை வழங்கினர்.