தில்லி எம்.டி.என்.எல் கட்டடத்தில் தீ விபத்து
தில்லி மகாநகர் தொலைபேசி நிகாம் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி மகாநகர் தொலைபேசி நிகாம் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
கிடவாய் பவனில் உள்ள மகாநகர் தொலைபேசி நிகாம் கட்டடத்தின் 6வது மாடியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 15 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது கட்டடத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து ஏற்படவில்லை.