முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹரியாணா துணை முதல்வருக்கு கரோனா

ஹரியாணா மாநிலத்தின் துணை முதலமைச்சர் துஷ்யந்த் செளதலாவிற்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
ஹரியாணா மாநிலத்தின் துணை முதலமைச்சர் துஷ்யந்த் செளதலா
பகிர்:

ஹரியாணா மாநிலத்தின் துணை முதலமைச்சர் துஷ்யந்த் செளதலாவிற்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது,

கரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது. இருப்பினும், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாததால், நான் சுயதனிமைப்படுத்திக் கொண்டேன் என கூறினார்.

இதற்கு முன்னதாக, ஹரியாணாவின் முதலமைச்சர் எம். எல் கட்டர், சில அமைச்சர்கள், சட்டமன்ற தலைவர் கியான் சந்த் குப்தா மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.