கோழிக்கோடு விமான விபத்து : தொடர் சிகிச்சையில் 2 பேர்
கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜீவ் பன்சால் கூறுகையில்,
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
துபையிலிருந்து கோழிக்கோடுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் உள்பட 21 பேர் பலியாகினர்.