புலனாய்வுப் பணியகத்திற்கு 4 சிறப்பு இயக்குநர்கள் நியமனம்
இந்திய புலனாய்வுப் பணியகத்திற்கு புதிதாக 4 சிறப்பு இயக்குநர்களை நியமித்து திங்கள்கிழமை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய புலனாய்வுப் பணியகத்திற்கு புதிதாக 4 சிறப்பு இயக்குநர்களை நியமித்து திங்கள்கிழமை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு ஊடுருவல்களை விசாரிக்கும் துறையான புலனாய்வுப் பணியகத்திற்கு சிறப்பு இயக்குநர்களாக சுனில் குமார் பன்சால், அக்ஷய் குமார் மிஸ்ரா, சாம ராஜன் மற்றும் ஸ்வகத் டாஸ் ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது.