கேரளத்தில் புதிதாக 3,830 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று புதிதாக 3,830 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM
கேரளத்தில் இன்று புதிதாக 3,830 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 3,830 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,17,864 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 14 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 2,263 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 84,604 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 32,713 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.