முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் இரவு நேர ஊரடங்கு அமல்

சத்தீஸ்கரில் நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
சத்தீஸ்கரில் இரவு நேர ஊரடங்கு அமல்
பகிர்:

சத்தீஸ்கரில் நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நாட்டின் தலைநகரான தில்லியிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கரில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →