ம.பி.: போபாலில் ஏப்.19 முதல் ஊரடங்கு அறிவிப்பு
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்ரல் 19 காலை 6 மணிமுதல் 26 காலை 6 மணிவரை போபால் மாநகராட்சி, பெரேசியா நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.