ஆக்சிஜனுக்கான கலால் வரி ரத்து 
தற்போதைய செய்திகள்

ஆக்சிஜனுக்கான கலால் வரி ரத்து: மத்திய அரசு

ஆக்சிஜனுக்கான கலால் வரியை ரத்து செய்வதாக பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

ஆக்சிஜனுக்கான கலால் வரியை ரத்து செய்வதாக பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்டக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

ஆலோசனை முடிவில், ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஸ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்தமிழ்நாட்டின் எஃகு மனிதர் முதல்வர் ஸ்டாலின்: கனிமொழி எம்.பி. பேச்சு

முட்ட கலக்கி - யூத் முதல் பாடல்!

இஸ்லாமாபாத் மசூதி தற்கொலைப் படை தாக்குதல் பின்னணியில் ஒரு பெண்? கைது செய்து விசாரணை!

சென்னையில் நோக்கியா ரூ. 270 கோடி முதலீடு!

ஆட்ட நாயகன் விருது வென்ற பாகிஸ்தான் வீரரின் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT