தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், எதிர்ப்புக் குழுவினர் நாளை போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும், ஆக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆலையை திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து எதிர்ப்புக் குழுவினர் மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் கூறியது,
ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள், வியாபாரிகள் உள்பட அனைவரும் நாளை தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.