முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
பகிர்:

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்.20 முதல் ஏப்.30ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை வரை தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரை அந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கட்டுப்பாடுகள்: முழு விவரங்களுக்கு..

முழு ஊரடங்கான மே 2ஆம் தேதி முகவர்கள், வேட்பாளர்கள் வாக்கெண்ணிக்கை மையங்களுக்கு செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் விதிமுறையை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →