விரைவில் அறிமுகமாகும் பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் 
தற்போதைய செய்திகள்

விரைவில் அறிமுகமாகும் பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன், இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிளாக்பெர்ரியின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன், இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.சி.எல் நிறுவனத்துடனான பிளாக்பெர்ரியின் உடன்படிக்கை கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், ஒன்வர்ட் மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் உடன்படிக்கை கையெழுத்துட்டுள்ளது.

அண்மையில் நடந்த நேர்காணலில் ஒன்வர்ட் மொபிலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் பிராங்க்ளின் பேசுகையில்,

இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாக்பெர்ரியின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும். தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய பிளாக்பெர்ரி 5 ஜி ஸ்மார்ட்போனை கீபோர்டுடன் உருவாக்கி வருகின்றோம் என கூறினார்.

மேலும், புதிய ஸ்மார்ட்போன் குறித்த வேறு எந்த தகவலும் பகிரப்படவில்லை.

ஒன்வர்ட் மொபிலிட்டி மற்றும் எஃப்ஐஎச் மொபைல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மீண்டும் இந்த ஆண்டில் உரிமத்தை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அதிகரித்ததன் காரணமாக பல ஆண்டுகளாக விற்பனை குறைந்து வருவதைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி 2016 ஆம் ஆண்டு சந்தையிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT