தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி வாகன விபத்து: ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் களை பறிக்க காட்டு வேலைக்கு விவசாய கூலித் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற குட்டியானை எனப்படும் சிறிய வகை சரக்கு வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தில் மணக்காடு -  மணப்படை ஊரைச் சேர்ந்த 5 பெண்கள் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT