தமிழகத்தில் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1,200ஆகக் குறைப்பு
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,000இல் இருந்து ரூ.1,200ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படும் பரிசோதனைகள் ரூ.800ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன், தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ. 400, தெலங்கானா மாநிலத்தில் ரூ. 500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.