முகப்பு
தற்போதைய செய்திகள்

படையாட்சியூரில் சமத்துவ பொங்கல் விழா

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்யாணகிரி  ஊராட்சி படையாட்சியூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
படையாட்சியூரில் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்யாணகிரி  ஊராட்சி படையாட்சியூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்யாணகிரி ஊராட்சி படையாட்சியூரில், தை புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் பி. டி. அழகரசன் தலைமையில், ஊர் கூடி சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகன், மணிகணேசன், விஜியாவீரராசு, .ஜமுனாசக்திவேல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அழகுமாலதி, ஊராட்சி செயலாளர் முருகன மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள்  ஊர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரே பானையில் சமத்துவ பொங்கல் வைத்து, அனைவரும் பகிர்ந்து உண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.