‘தீர்மானம் நிறைவேற்றப்படுவதால் எதுவும் மாறாது’: மேற்குவங்க பாஜக தலைவர்
மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் எதுவும் மாறப்போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் எதுவும் மாறப்போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் நேற்று(வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து திலீப் கோஷ் கூறியதாவது,
பணமதிப்பிழப்பு மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி தீர்மானங்களை நிறைவேற்றினார். அந்த தீர்மானங்கள் மூலம் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அந்த தீர்மானங்கள் சட்டப்பேரவைக்காக மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் இருக்கும்போதே அவரை பதவியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பேசுவது நாகரீகமற்ற செயல் என்று கூறியுள்ளார்.