தற்போதைய செய்திகள்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: பிரதமர் இன்று மாலை ஆலோசனை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் நடத்தவுள்ளார்.

DIN

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் நடத்தவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோ்வை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தோ்வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி!

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!

வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்! முதல்வர் வாக்குறுதி!

மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு! முதல்வர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT